Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நல்லதையே நினைப்போம்

நல்லதையே நினைப்போம்

நல்லதையே நினைப்போம்

நல்லதையே நினைப்போம்

ADDED : ஜன 21, 2015 02:01 PM


Google News
Latest Tamil News
* வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும், கடவுளை வழிபட மறப்பது கூடாது.

* மனம் தீவிரமாக எதில் ஈடுபடுகிறதோ, அதை அடையும் சக்தியைப் பெற்று விடுகிறது. எனவே, மனதை நல்ல விஷயங்களில் செலுத்துங்கள்.

* அலட்சிய குணம் ஆபத்தானது. அதனால், நமக்கு மட்டுமின்றி மற்றவருக்கும் தீங்கு உண்டாகும்.

* பண்புடையவர்களால் தான் உலகம் இயங்குகிறது.

* போட்டியுணர்வு இருக்கும் வரையில், யாருக்கும் எதிலும் மனநிறைவு ஏற்படப் போவதில்லை.

* பணத்தில் மட்டுமல்ல பேச்சிலும் சிக்கனம் தேவை.

- காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us