Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/அன்பால் திருத்துங்கள்

அன்பால் திருத்துங்கள்

அன்பால் திருத்துங்கள்

அன்பால் திருத்துங்கள்

ADDED : அக் 03, 2012 11:10 AM


Google News
Latest Tamil News
* உடலால் செய்யும் நன்மையை மட்டுமே அகிம்சை என்று எண்ணுகிறோம். யாருக்கும் எவ்வித துன்பமும் ஏற்படக் கூடாது என்று மனதால் எண்ணுவது தான் அகிம்சை.

* பிறர் நமக்கு கெடுதல் செய்வதாகத் தோன்றினால், பதிலுக்கு பதில் இம்சை செய்யக்கூடாது.

* அகிம்சையைப் பின்பற்றுபவனிடம் அணுவளவும் கோபம் உண்டாகாது. மாறாக அன்பும் கருணையுமே ஏற்படும்.

* மனதில் எப்போதும் அமைதி நிலைத்திருந்தால் செல்லும் இடத்தில் எல்லாம் சாந்தம் பரவத் தொடங்கி விடும். மனிதர் மட்டுமில்லாமல் பறவை, விலங்கு போன்ற உயிர்களிடமும் கூட அமைதியை உண்டாக்கும்.

* எண்ணம், சொல், செயல் என்னும் மூன்றாலும் அகிம்சையைப் பின்பற்றுபவன் கொடிய பகைவனிடம் கூட அன்பு செலுத்துவான்.

* தவறு செய்பவர்களை தண்டிக்காமல், குழந்தையாக எண்ணி அன்பால் திருத்த முயல வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us