Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/கடமையை செய்தாலே போதும்

கடமையை செய்தாலே போதும்

கடமையை செய்தாலே போதும்

கடமையை செய்தாலே போதும்

ADDED : மே 08, 2011 04:05 PM


Google News
Latest Tamil News
* அவரவர் கடமையை சரிவர செய்தாலே மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை அனைத்தும் உண்டாகிவிடும்.

* மனசுத்தத்தோடு மகிழ்ச்சியாக இருங்கள். எங்கு சென்றாலும் அங்கு நல்லமுறையில் மகிழ்ச்சியை உருவாக்குங்கள்.

* மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ, அதே நிலையிலிருந்து அவர்களை முன்னுக்கு அழைத்துச் செல்ல வேண்டியது தலைவர்களின் கடமை.

* தேவைக்கு குறைவாகச் செலவு செய்து எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து அதைத் தர்மத்துக்கு செலவழிப்பது தான் தனக்கு மிஞ்சிய தர்மம் என்பதன் பொருள்.

* துக்கங்கள் அனைத்தையும் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம் போன்று துக்கம் பரம லேசாகிவிடுகிறது.

* நமது சொந்த விருப்பங்களுக்காக செயல்படுகிறோம் என்ற நிலையை மாற்றி, நமக்கு எவ்விதமான லாபமும் தராத செயல்களில் ஈடுபடப் பழக வேண்டும்.

* வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டுவிட்டால், பிறகு அதன் ஒவ்வொரு துறையிலும் ஒழுக்கத்தினால் அழகு ஏற்படுகிறது.

- காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us