Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/முதலில் குடும்பம் தான்!

முதலில் குடும்பம் தான்!

முதலில் குடும்பம் தான்!

முதலில் குடும்பம் தான்!

ADDED : மே 21, 2012 12:05 PM


Google News
Latest Tamil News
* ஒரு நல்ல விஷயத்தில் மனம் பூரணமாக ஈடுபட்டால் அதில் அழுக்குப்படிய வாய்ப்பில்லை. ஆனால், மனதை நேரடியாக அடக்க முயன்றால் அது திமிறிக்கொண்டு நாலாபுறமும் ஓடத் தொடங்கும்.

* பணம், பேச்சு, செயல் என்று ஒவ்வொரு விஷயத்திலும் கணக்காக இருக்கவேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

* நம் கடன் பணி செய்து கிடப்பதே என்பதை அனைவரும் பின்பற்ற வேண்டும். கடன் என்றால் கடமை என பொருள்.

* குடும்பக் கடமைகளை விட்டு விட்டு சிலர் சமூகசேவை என்று கிளம்பி விடுகிறார்கள். முதலில் குடும்பம். அதன் பின் சமூகத்தை கடமை உணர்வோடு அணுகுங்கள்.

* தெய்வ வழிபாட்டுக்கு பக்தியும், முன்னோர் வழிபாட்டுக்கு சிரத்தையும் வேண்டும். பக்தியும், சிரத்தையும் இருந்துவிட்டால் வாழ்க்கையைச் சுகமாக நடத்த முடியும்.

- காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us