Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பொருளற்ற பேச்சு வேண்டாம்

பொருளற்ற பேச்சு வேண்டாம்

பொருளற்ற பேச்சு வேண்டாம்

பொருளற்ற பேச்சு வேண்டாம்

ADDED : ஏப் 09, 2010 09:50 AM


Google News
Latest Tamil News
* உடம்பில் உள்ள உறுப்புகளில் வாய்க்குத் தான் அதிகமான வேலை கொடுக்கிறோம். சாப்பிடுவது மட்டுமின்றி பேசுவது என்று இரு செயல்களில் வாய் ஈடுபடுகிறது. 'வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி' என்பார்கள். இதில் சாப்பாடு, பேச்சு என்ற இரண்டு விஷயங்களும் அடங்குகின்றன.

* நடைமுறையில் நாம் தேவைக்கு அதிகமாக வாய்க்கு வேலை கொடுக்கிறோம். நொறுக்குத்தீனி, பானம் என்று ஏதாவது ஒன்றை நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். வெறுமனே பொருள் இல்லாமல் பேசிக்கொண்டே இருக்கிறோம். இவ்விரண்டுமே நம்மை வேண்டாத பிரச்னைகளில் தள்ளிவிடும்.

* பேசுவதாக இருந்தால் கடவுளைப் பற்றி பேசுங்கள். பக்திப் பாடல்களைப் பாடுங்கள். நாமஜெபம் செய்யுங்கள். இல்லாவிட்டால் மவுனமாக இருக்கப் பழகுங்கள். அதுபோல சாத்வீகமான நல்ல உணவுவகைகளை மிதமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

* மவுனப்பயிற்சியும் , விரதமும் நமக்கு கைகூடும்போது, மனம் கடவுளோடு ஒன்றுவதை நம்மால் உணரமுடியும். தினமும் அரைமணிநேரமாவது தியானம் பழகுவது மவுனவிரதத்திற்கு உதவியாக இருக்கும்.

-காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us