Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/கஷ்டத்தைப் பெரிதுபடுத்தாதே!

கஷ்டத்தைப் பெரிதுபடுத்தாதே!

கஷ்டத்தைப் பெரிதுபடுத்தாதே!

கஷ்டத்தைப் பெரிதுபடுத்தாதே!

ADDED : ஜன 25, 2012 09:01 AM


Google News
Latest Tamil News
* தர்மத்திற்கு எப்போதும் அழிவு இல்லை. நிலையான தர்மத்தை மதித்து நடக்க வேண்டியது அவசியம். தர்மப்படி நடப்பவனை பஞ்சபூதங்களும், பிராணிகளும் மதித்து வணங்கும்.

* மனதிற்குள் கஷ்டங்களை வைத்துக் கொண்டு வருந்தாதீர்கள். இறைவனிடம் மனம் விட்டு வேண்டினால் நிம்மதி பிறக்கும்.

* குழந்தை அடம் பிடித்தால் தாய் கட்டிப் போடுவது போல், நம்மிடம் உள்ள ஆசை என்ற விஷமத்தை நீக்க, இறைவன் நம் விருப்பங்களை நிறைவேற்றாமல் கட்டிப் போடுகிறான்.

* நம்முடைய துன்பத்தையே பெரிதாக எண்ணிக் கொண்டு, பிறருக்கான பணியை செய்யாமல் விட்டுவிடக்கூடாது.

* நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீரில் மூழ்கிய குடம் போல துன்பம் லேசாகிவிடும்.

* எந்தச் செயலையும் முறையுடன் செய்ய வேண்டும். முறை தவறும் போது, அதற்குரிய துன்பத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us