Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/ஒழுக்கம் மிக அவசியம்

ஒழுக்கம் மிக அவசியம்

ஒழுக்கம் மிக அவசியம்

ஒழுக்கம் மிக அவசியம்

ADDED : அக் 20, 2011 03:10 PM


Google News
Latest Tamil News
* மனம், வாக்கு, உடம்பு மற்றும் பணத்தால் நல்ல செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.

* ஒரு பொருளைப் பெற மனிதன் முயற்சி செய்கிறான். நியாயமான வழியில் கிடைக்காவிட்டால் குறுக்கு வழியில் பெற முயற்சிப்பது பாவம்.

* விக்கிரமாதித்தன் கதையில் கூறப்பட்ட வேதாளத்தை போன்றது மனம். நம் மனத்தை நமக்கு அடிமைப்படுத்துவது தான் நிஜமான வழிபாடு.

* துணி, உடம்பு, வீடு இவைகள் அழுக்கில்லாமல் இருந்தால் போதாது, முக்கியமாக நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.

* எதிலுமே சரி, அளவு அறிந்து, ஒரு மட்டத்தோடு நிற்கிற மனநிலை வந்தால் தான் அமைதி உண்டாகிறது.

* வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டால், பிறகு ஒவ்வொரு துறையிலும் ஒழுக்கத்தினால் உண்டாகிற அழகும் ஏற்படுகிறது.

* உடலும், மனமும் சேர்ந்து ஒன்றை ஒன்று தூய்மைப்படுத்திக் கொள்ளும் முறையில் நம் செயல்கள் அமைய வேண்டும்.

* ஆசை இல்லாவிட்டால் மனதில் கோபமோ, பயமோ இல்லை. ஆசையின்மை நமக்கு பரிபூரண ஆனந்தம் தரும்.

- காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us