Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பெரிய நிதி காத்திருக்கு!

பெரிய நிதி காத்திருக்கு!

பெரிய நிதி காத்திருக்கு!

பெரிய நிதி காத்திருக்கு!

ADDED : டிச 19, 2012 10:12 AM


Google News
Latest Tamil News
* கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவரை அனுபவிக்க வேண்டும் என்ற தாகத்துடன் பக்தி செய்பவர் மீது கருணை கொண்டு கடவுள் அருள்புரிவார்.

* ஆசை என்பதே இல்லாமல் அல்லும் பகலும் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொள்ள நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

* பக்திப்பாடல் பாடுவதற்கு வெட்கம் கூடாது. கருணையே உருவான கடவுளின் திருநாமங்களைச் சொல்வதில் கூச்சத்திற்கு இடமில்லை.

* வாழ்க்கை என்னும் வியாபாரத்திற்கு இடையே சிறிது நேரமாவது 'சிவா, ராமா, கிருஷ்ணா' என்று பக்தியோடு சொல்லுங்கள். இது மனதிற்கு நிம்மதி தரவல்ல பெரிய நிதி.

* அன்றாட வீட்டுப் பணிகளோடு குடும்பத்தோடு கூட்டாக சேர்ந்து வழிபடுவது அவசியம்.

* பக்திப்பாடல் பாட சங்கீத ஞானம் இல்லாவிட்டால் பரவாயில்லை. பக்தி என்ற பாவனை தான் முக்கியம்.

* வாழ்க்கைத்தரம் என்பது பணம் சார்ந்த விஷயமல்ல. நல்ல குணம், கடவுள் பக்தியுடன் வாழும் வாழ்வே தரமான வாழ்வு.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us