Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/புண்ணிய எண்ணம் புனிதம் தரும்

புண்ணிய எண்ணம் புனிதம் தரும்

புண்ணிய எண்ணம் புனிதம் தரும்

புண்ணிய எண்ணம் புனிதம் தரும்

ADDED : ஏப் 05, 2011 01:04 AM


Google News
Latest Tamil News
* சத்தியம் என்றால், வாக்கும் மனதும் ஒன்றுபடுவது மட்டுமன்று. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை

வாக்கில் சொல்வதே சத்தியம்.

* ஒவ்வொரு மனிதனிலும் ஈஸ்வரன் தான் குடி இருக்கிறார், ஒருவரை நமஸ்கரிக்கும் போது அந்த ஈஸ்வரனையே வழிபடுவதாக தான் அர்த்தம்.

* மனம் தியானத்தில் நிலைத்து நிற்க, அசையாத பரம்பொருளைக் கெட்டியாகப்பிடித்துக் கொள்ள வேண்டும்.

* கோபத்தால் பிறரைத் தாக்குவதாக நினைத்தாலும், அது நம்மையே தான் அதிகம் தாக்குகிறது. தேகம், மனம் இரண்டுக்கும் பெரிய பாதிப்பு உண்டாகிறது.

* பொருள் சேர்ப்பதிலும், அலங்காரம் செய்து கொள்வதிலும் தற்காலிக இன்பம் கிடைக்கலாம். ஆனால், உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே இருக்கிறது.

* புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொண்டால், உலகமே புனிதமாகும்.

* பிறரிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்துவதை தவிர்த்துவிட்டு, அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களை வெளிப்படுத்த வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us