Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஜெயேந்திரர்/அகந்தை உடையவன் தாழ்நிலையை அடைவான்

அகந்தை உடையவன் தாழ்நிலையை அடைவான்

அகந்தை உடையவன் தாழ்நிலையை அடைவான்

அகந்தை உடையவன் தாழ்நிலையை அடைவான்

ADDED : மே 31, 2017 03:05 PM


Google News
Latest Tamil News
* உண்மை, பொறுமை, அமைதி மிக்க நல்லவர்களின் சொல்லுக்கு சக்தி அதிகம். இவர்கள் சொன்னது அப்படியே பலிக்கும்.

* ஆசை இருக்கும் வரை மனிதனைப் பிறவிப்பிணி தொடரும். ஆசையற்ற நிலையில் ஜீவன் முக்தி அடைந்து விடும்.

* தாயும், தந்தையுமே கண்கண்ட தெய்வங்கள். அவர்களுக்கு பிள்ளைகள் உதவி செய்ய வேண்டியது கடமை.

* தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி தரும் செயல்களில் மனிதன் ஈடுபட வேண்டும்.

* திருப்தியுடன் வாழ்வதை விட மேலான செல்வம் வேறில்லை. நல்லவர்கள் புகழும் விதத்தில் நம் வாழ்வு அமைய வேண்டும்.

* அடக்கமுடையவன் வாழ்வில் படிப்படியாக உயர்வான். அகந்தை உடையவன் படிப்படியாக தாழ்நிலையை அடைவான்.

* சுகத்தை அனுபவிக்க புண்ணியத்தை விதையுங்கள். நற்செயல்களில் ஈடுபட்டால் அது மரம் போல வளர்ந்து நமக்கு நிழல் கொடுக்கும்.

ஜெயேந்திரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us