Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/அன்பான ஒரு வார்த்தை போதும்!

அன்பான ஒரு வார்த்தை போதும்!

அன்பான ஒரு வார்த்தை போதும்!

அன்பான ஒரு வார்த்தை போதும்!

ADDED : ஜன 28, 2010 04:25 PM


Google News
Latest Tamil News
<P>* ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது. பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும் நல்லவையாக இருக்க வேண்டும்.<BR>* நன்மை ஏற்பட்டாலும் சரி, கெடுதல் ஏற்பட்டாலும் சரி உனது செயல்களின் பலன்களை நீ அடைந்தே ஆகவேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை.<BR>* எவனும் தனக்குத் தானே தலைவனாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். தன்னைத் தானே அடக்கப் பழகிக் கொண்டவன், தலைமை ஏற்கத் தகுதி உடையவனாகிறான். தலைமைப் பண்புகளுக்கு எல்லாம் அடக்கமே அடிப்படைப் பண்பாகும்.<BR>* மூடர்களுடன் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும், தனியே வாழ்வது சிறந்தது. துஷ்டர்களுடன் நட்புக் கொள்வதும் இதே போன்றதே. மூடர்களுடன் சேர்ந்தால் கவலையும், துஷ்டர்களுடன் சேர்ந்தால் பாவமும் நமக்கு உண்டாகும்.<BR>* அறிவோடும், விழிப்போடும் வாழ்க்கை நடத்துபவர்கள் ஞானம் என்னும் மேலான நிலையை அடைவர். அவர்கள் செல்லும் வழியை எமனால் கூட அறிய முடியாது.<BR>*புயல் காற்றுக்கு அசையாமல் பாறை இருப்பது போல, மெய்யுணர்வு பெற்ற ஞானிகள் புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் ஒன்றாகவே கருதுவர். <BR><STRONG>-புத்தர்</STRONG></P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us