Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தெய்வ அருள் பெற வழி

தெய்வ அருள் பெற வழி

தெய்வ அருள் பெற வழி

தெய்வ அருள் பெற வழி

ADDED : ஜூலை 21, 2010 08:07 PM


Google News
Latest Tamil News
* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வம் நமக்கு

அருள்புரியும்.

* பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே, தெய்வ அருளுக்கு பாத்திரமாகி விடுவோம்.

* மனதில் தூய்மையான எண்ணம் வேண்டும். பயமான, கபடமான, குற்றமான,

பகைமையான எண்ணங்களை அகற்ற வேண்டும். அவ்வாறு செய்தால், நம் உடல் முழுவதும்

தெய்வீகத்தன்மை பரவத் தொடங்கும்.

* வீட்டில் தெய்வத்தைக் காணும் திறமை இல்லாதவன், மலைச் சிகரத்தை எட்டிப்பிடித்து அங்கே தவம்

செய்தாலும் கடவுளை ஒருபோதும் காண முடியாது.

* கேட்டவுடனே நாம் கேட்ட அனைத்தையும் கொடுப்பதற்காக தெய்வம் இல்லை. பக்திப்பெருக்கினால் மனம் பக்குவம் பெற்ற பிறகுதான், நாம் கேட்ட வரத்தைத் தெய்வம் வழங்கும்.

* கோயிலில் மட்டுமே தெய்வம் இருக்கிறது என்று

நம்புபவர்கள், நம்மைச் சூழ்ந்திருக்கும் ஜனங்களிடம் தெய்வத்தைக் காண முயல்வதில்லை. உலகை இயக்கும் பரம்பொருளே இத்தனை கோடி ஜீவராசிகளாக நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை உணருங்கள்.

-பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us