Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நல்லறிவு வேண்டும் தாயே!

நல்லறிவு வேண்டும் தாயே!

நல்லறிவு வேண்டும் தாயே!

நல்லறிவு வேண்டும் தாயே!

ADDED : ஜூலை 03, 2010 06:07 PM


Google News
Latest Tamil News
* சக்தித்தாயே! எங்கள் வாழ்வினை

வளப்படுத்தும் நல்லறிவைத் தா. உலக மக்களை எல்லாம் காப்பாற்றும் வலிமையைக் கொடு. மன சஞ்சலம் போக்கிடும் தவக்

கனலாய் என்னுள் எழு. விண்ணை அளக்கும் ஆற்றலையும், இன்பத்தையும் கொடு.

* விதியையே மாற்றும் சக்திபடைத்த

உமையவளே! என் உள்ளத்தில் ஒளிரும் ஒளிவிளக்கே! உலகம் முழுவதையும் படைத்தும், காத்தும் அருள்

செய்பவளே! பயிரினைக் காக்கும் மழைபோல வந்து எங்களுக்கு பாதுகாப்பு கொடு.

* சக்தி என்னும் நாமத்தை எங்கும் ஒலிக்கச்செய். உன்

வடிவத்தைக் காணும் பாக்கியத்தைக் கொடு. உன்னை அறிந்தவர்களின் வாழ்வு சுடர்போல ஒளிமயமாகட்டும். உன் புகழ் பாடும் நாங்கள் புகழுடன் வாழ வழிகாட்டு.

* சக்தித்தாயே! உன்னை நினைக்கும் மனிதர்களை தூக்க நிலையிலும் விழிப்போடு செயல்படச் செய். நீ

இருக்குமிடத்தில் அன்பு நிலைத்திருக்கும்.

* உன்னை வணங்கும் எங்களது சோம்பலை நீக்கியருள். துணிவோடு செயல்படச் செய். எங்கள் பேச்சில்

உண்மையும் தெளிவும் நிறைந்திருக்கச் செய். எப்போதும் உன் சிந்தையிலேயே இருக்கச்செய்.

-பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us