Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/மனதில் நம்பிக்கை மலரட்டும்

மனதில் நம்பிக்கை மலரட்டும்

மனதில் நம்பிக்கை மலரட்டும்

மனதில் நம்பிக்கை மலரட்டும்

ADDED : ஜூன் 12, 2012 09:06 AM


Google News
Latest Tamil News
* பாவத்தைப் போக்கி விட்டால், மனிதனுக்கு தேவர்களைப் போல அமரவாழ்வு உண்டாகும்.

* பழி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவனுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

* எந்த விஷயத்தையும் ஆராய்ந்து அனுபவத்தில் பார்த்தால் மட்டுமே அது உண்மையா, பொய்யா என்பதை நம்மால் உணர முடியும்.

* மனிதன் துன்பத்தில் இருந்து விடுபட்டு என்றும் மாறாத பேரின்பத்தை அடைய வேண்டும் என்பது தான் ஆன்மிகத்தின் நோக்கம்.

* கவலை, கோபம், பொறாமை, வெறுப்பு ஆகியவை விஷத்தன்மை கொண்டவை. இவை மனதில் நுழைய ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

* சொல்லிலும் நடையிலும் நேர்மை இருக்கட்டும். உள்ளத்திலும் உதட்டிலும் உண்மை தவழட்டும். சத்தியமே நம்மை வழிநடத்தட்டும்.

* பயம், சந்தேகம், சோம்பல் போன்ற எதிரிகள் நம் மனதில் ஒளிந்து இருக்கிறார்கள். நம்பிக்கை மலர்ந்து விட்டால் அகப்பகைவர்களை எளிதில் வெல்ல முடியும்.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us