Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/ஜீவகாருண்யமே மேலானது

ஜீவகாருண்யமே மேலானது

ஜீவகாருண்யமே மேலானது

ஜீவகாருண்யமே மேலானது

ADDED : மே 31, 2017 03:05 PM


Google News
Latest Tamil News
* எரியும் விளக்கு இருந்தாலும் அதைக் காண கண்கள் வேண்டும். அதுபோல உதவி செய்ய பலர் உடனிருந்தாலும் சுயபுத்தி இருப்பது அவசியம்.

* கோபத்திற்கு ஆளாகும் ஒருவன் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்கிறான். எந்த சூழ்நிலையிலும் கோபத்தை தவிருங்கள்.

* எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண்மையைத் தான் கூறுகின்றன. ஆனால் எல்லாருக்கும் சாஸ்திரம் ஒத்து வருவதில்லை.

* தன்னைத் தானே திருத்திக் கொள்ள முடியாதவன் பிறரைத் திருத்தும் அதிகாரத்தை இழந்து விடுகிறான்.

* ஜீவகாருண்யமே எல்லா தர்மங்களிலும் மேலானது. எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது நம் கடமை.

பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us