Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/கைமாறு கருதாமல் உதவுங்கள்

கைமாறு கருதாமல் உதவுங்கள்

கைமாறு கருதாமல் உதவுங்கள்

கைமாறு கருதாமல் உதவுங்கள்

ADDED : ஆக 01, 2010 12:08 PM


Google News
Latest Tamil News
* வைரம் போல பலம் படைத்தவர்களாகவும், பறவைகளைப் போல சுதந்திரம் கொண்டவர் களாகவும், சிங்கத்தைப் போல தைரியம் மிக்கவர்களாகவும் இருக்கவேண்டும்.

* மனதை ஒருமுகப்படுத்தினால் உடல்நலம் மேம்பாடு பெறும். நோய்களைப் போக்கி, உடலை பலமிக்கதாக்க மனஉறுதி ஒருவருக்கு அவசியம். மகிழ்ச்சி, உற்சாகம் கொண்டவர்கள் மன உறுதியை ஒருபோதும் இழப்பதில்லை.

* கைமாறு கருதாமல் பிறருக்கு எந்தவிதத்தில் உதவி செய்தாலும், கஷ்டங்களைப் போக்கி வழிகாட்டினாலும் அது தர்மம் தான். தர்ம சிந்தனை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய குணமாகும்.

* வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும், கூட்டத்திலும் எங்கும், எதிலும், எப்போதும் ஒழுக்கமாய், நேர்மையாய் இருக்க வேண்டும். உண்மையாய் இருப்பது ஒன்றே தவங்களுக்கெல்லாம் மேலானதும், உயிரானதும் ஆகும்.

* எந்த விஷயத்தை அணுகினாலும் நன்மையும், தீமையும் இருக்கத்தான் செய்யும். ஆனால், நாம் தான் நம்முடைய அறிவினைப் பயன்படுத்தி துன்பத்தைப் போக்கி இன்பத்தை அனுபவிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

-பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us