Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தைரியம் தான் புண்ணியம்

தைரியம் தான் புண்ணியம்

தைரியம் தான் புண்ணியம்

தைரியம் தான் புண்ணியம்

ADDED : டிச 01, 2013 10:12 AM


Google News
Latest Tamil News
* தர்மவழியில் நடந்து வருபவனை மனிதன் என்பதை விட, கடவுள் என்றே சொல்ல வேண்டும்.

* கை பிடித்த மனைவியின் மனம் கொதிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது. அத்தகையவன் வீட்டில், லட்சுமிதேவி கால் வைக்க விரும்ப மாட்டாள்.

* பொறுமையில்லாதவன் வாழ்வில் இன்பத்தை அடைய முடியாது. பொறுமையை வளர்த்தால் உலக விஷயங்களில் வெற்றி அடைவது உறுதி.

* புராணங்களைக் கேட்டுப் பயனடையுங்கள். அவற்றை வேதங்களாக நினைத்து மடமை பேசி விலங்கு போல நடந்து கொள்ளாதீர்கள்.

* யாருக்கும் எதற்கும் அஞ்சாத மன உறுதி வேண்டும். மன தைரியத்தைக் காட்டிலும் சிறந்த புண்ணியம் இந்த மண்ணிலும் இல்லை. விண்ணிலும் இல்லை.

- பாரதியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us