Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/பணியில் முன்னேற்றம் தரும் ஸ்லோகம்

பணியில் முன்னேற்றம் தரும் ஸ்லோகம்

பணியில் முன்னேற்றம் தரும் ஸ்லோகம்

பணியில் முன்னேற்றம் தரும் ஸ்லோகம்

ADDED : ஜூன் 03, 2011 10:12 AM


Google News
சிலருக்கு வாழ்வில் எதைச் செய்ய முயன்றாலும் ஏதாவது ஒருவிதத்தில் தடங்கல் உண்டாகும். அப்படி செய்து முடித்தாலும் அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைப்பதில்லை. இவ்வாறு காரியத்தடங்கல் ஏற்படுவதற்கு முற்பிறவியில் செய்த பாவங்களே காரணம். இவர்களை 'யோகக்கட்டைகள்' என்று கேலி செய்வார்கள்.

முற்பிறவியில் நல்வினைப்பயன் இருக்குமானால், இப்பிறவியில் செய்யும் எல்லாச் செயல்களும் வெற்றியைத் தரும். அதுவே எதிர்மறையான செயல்களை சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்களின் முன்னோரோ செய்திருந்தால், தடங்கல் ஏற்பட்டு விடும். இதை ஒரு எளிய ஸ்லோகத்தின் மூலம் சரி செய்யலாம். ராமாயணத்தை இந்தியில் 'ராமசரிதமானஸ்' துளசிதாசர் எழுதியுள்ளார். அதில் பாலகாண்டத்தில் வரும்,

'பந்தௌ நாம ராம் ரகுபர் கோ!

ஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோ!!

பிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ!

அகுண அனூபம் குண நிதான் ஸோ!!

என்ற ஸ்லோகம் இந்த தடங்கலை சீர்செய்யும்.

இதைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லலாம்.

''ரகுநாதா! உன் நாமத்தை வணங்குகிறேன். அக்னி, சூரியன், சந்திரன் எல்லாமே அந்நாமத்தில் அடங்கி உள்ளன. ராமநாமத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியின் அம்சங்களும் உள்ளன. வேதத்தின் உயிர்நாடியும், நிர்குணமானவனும், நற்குணங்களின் இருப்பிடமாகவும் இருக்கும் ராமநாமத்தை போற்றுகின்றேன்''

இந்த ஸ்லோகத்தைச் சொல்ல எவ்வித விரதமும் இருக்க வேண்டியதில்லை. நேரம் காலமும் இல்லை. தினம் 3 முறை தொடர்ந்து ஜெபித்து வருவோருக்கு முன்வினைப் பாவம் நீங்கி அனுகூலம் உண்டாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us