Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/கனியுடன் காத்திருந்த சபரி

கனியுடன் காத்திருந்த சபரி

கனியுடன் காத்திருந்த சபரி

கனியுடன் காத்திருந்த சபரி

ADDED : பிப் 13, 2021 03:57 PM


Google News
Latest Tamil News
சீதையைத் தேடி வந்த ராமரும், லட்சுமணரும் காட்டில் மதங்க மகரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்தனர். அங்கு மதங்கரின் சிஷ்யையான சபரியை கண்டனர். அவள் தன் குருநாதர் அறிவுரைப்படி 12 ஆண்டுகளாக ராம தரிசனம் பெற காத்திருந்தாள். காட்டில் சேகரித்த இலந்தைப் பழம், தேன், கிழங்குகளை ராமருக்குக் கொடுத்தாள். அவளது அன்பைக் கண்ட ராமருக்கு ஆனந்தக்கண்ணீர் வந்தது. ''ஐயனே! உங்களைக் காண்பதற்காக இவ்வளவு காலம் என் உயிரைத் தாங்கியிருந்தேன். பிறவிப்பயனை அடைந்து விட்டேன்” என வணங்கினாள். அவளது உயிர் ஜோதி வடிவில் விண்ணுலகம் சென்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us