ADDED : பிப் 01, 2021 07:12 PM

ஒருமுறை பாற்கடலுக்கு வந்த நாரதர், ''மகாலட்சுமித்தாயே! உன்னை விரும்பாதவர்கள் யாருமில்லை. எங்கெல்லாம் நீ விருப்பமுடன் தங்குவாய்?' எனக் கேட்டார், “தினமும் விளக்கேற்றும் வீடு, துளசி மாடம், சங்கு, சாளக்கிராமம், தாமரை, தானியக்குவியல், தானம் செய்யும் இடம், மாட்டுக் கொட்டில், தயாள குணம் கொண்டவர், இனிமையாகப் பேசுபவர், சுறுசுறுப்பு மிக்கவர், தற்பெருமை இல்லாதவர், சத்திய வழி நடப்பவர், ஈரக்காலுடன் சாப்பிட அமர்பவர், ஈரக்காலை துடைத்துவிட்டு துாங்கச் செல்பவர், கூந்தலை பின்னி முடித்த பெண்கள் இருக்கும் இடங்களில் நிரந்தரமாக வாசம் செய்வேன்'' என்றாள்.