Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/கட்டிக்காப்பார் காலபைரவர்

கட்டிக்காப்பார் காலபைரவர்

கட்டிக்காப்பார் காலபைரவர்

கட்டிக்காப்பார் காலபைரவர்

ADDED : ஆக 12, 2011 03:25 PM


Google News
Latest Tamil News
வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியூர் கிளம்ப பயப்படுவோர் பலர். அதிலும், இந்த கலியுகத்தில் ஆள் இருக்கும்போதே பொருட்களை அபேஸ் செய்து விடுகிறார்கள். நியாயமான வழியில், நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருட்கள், நம்மிடமே தங்க அருள்புரிகிறார் காலபைரவர். இவரது வாகனம் நாய்.

வாயில்லா ஜீவனான நாய் நன்றியுணர்வோடு சுற்றி வந்து வீட்டைப் பாதுகாப்பது போல, இவரும் நம் இல்லத்துக்கு பாதுகாப்பாக இருப்பார். தன்னை முழுநம்பிக்கையுடன் அண்டி வந்தவர்களைக் காவல் காப்பதில் காலபைரவர் ஈடுஇணை இல்லாதவர். தேய்பிறை அஷ்டமியன்று இவரை வழிபடுவது சிறந்தது. வழிபாட்டின்போது, எலுமிச்சம்பழத்தைப் பைரவரின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள். திருமஞ்சனப்பொடி, பால், தயிர்,பச்சரிசி மாவு ஆகிய அபிஷேகங்களும் செய்யலாம். தயிர்சாதம் படைத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். வீட்டுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us