Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/வரம் தரும் கருமாரியம்மன்

வரம் தரும் கருமாரியம்மன்

வரம் தரும் கருமாரியம்மன்

வரம் தரும் கருமாரியம்மன்

ADDED : அக் 20, 2020 03:06 PM


Google News
ஒரு முறை கைலாயத்திற்கு வந்த பிருங்கி முனிவர், சிவனை மட்டும் வலம் வந்தார். அருகில் இருந்த பார்வதி கோபத்துடன் சிவனுடன் நெருங்கி அமர்ந்தாள். சிவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பிருங்கி, வண்டாக மாறி இருவர் இடையே நுழைந்து சிவனை சுற்றினார். கோபம் கொண்ட பார்வதி, முனிவரின் உடல்பலத்தை இழக்கச் செய்ய அவர் கீழே விழுந்தார். அதன்பின் தவறை உணர்ந்த முனிவர் மனிப்பு கேட்டார், ''திருவேற்காட்டில் கருமாரியாக இருக்கிறேன். அங்கு வந்து இழந்த சக்தியைப் பெறலாம்” என வரம் அளித்தாள். கருமாரியம்மனை வழிபட்டால் மனம், உடல் பலத்துடன் இருக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us