Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/கண்ணன் வருவான்! கருணை செய்வான் - உருகுகிறார் காஞ்சிப்பெரியவர்

கண்ணன் வருவான்! கருணை செய்வான் - உருகுகிறார் காஞ்சிப்பெரியவர்

கண்ணன் வருவான்! கருணை செய்வான் - உருகுகிறார் காஞ்சிப்பெரியவர்

கண்ணன் வருவான்! கருணை செய்வான் - உருகுகிறார் காஞ்சிப்பெரியவர்

ADDED : ஆக 19, 2011 02:00 PM


Google News
Latest Tamil News
நவநீதம்' என்றால் புதுசாக எடுத்தது என்று அர்த்தம். 'நவ'- புதுசாக; 'நீதம்'- எடுக்கப்பட்டது. புத்தம் புதுசாகக் கார்த்தாலே வேளையில் பசும்பாலில் உறை குத்தி சாயங்காலமே அந்த தயிரைச் சிலுப்பி எடுக்கிற வெண்ணெய் தான் நவநீதம்.

நாமெல்லாம் பசுக்கள். நம் மனசு வெள்ளை வெளேரென்று பாலாக இருக்கணும். அப்போது தான் கன்னங்கரேலென்று இருக்கிறதால் கிருஷ்ணன் என்றே பெயர் வைத்துக் கொண்டவன் நம்மிடம் வருவான். அது வெறுப்பைத் தருகிற கருப்பு அல்ல; மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு. அவனைக் 'கார்வண்ணன்' என்று சொல்வார்கள். மேகம் எத்தனைக்கு எத்தனை கருப்போ அத்தனைக்கு அத்தனை அதிகமா ஜலத்தைக் கொட்டும். அந்த ஜலம் கருப்பாகவா இருக்கிறது? இப்படி பரம பிரேம தாரையைப் பிரவாகமா கொட்டுகிறவனே கிருஷ்ணன்.

மேகத்தில் இருந்து தோன்றுகிற மின்னல் மாதிரி, ஞானப் பிரகாசம் பளிச்சென்று தோன்ற, கீதாசாரியனாக இருக்கிறான் அந்த கொண்டல் வண்ணன். அவன் வெளியில் கபடும் சூதும் மாயஜாலமுமாகத் தெரிந்தாலும், நாம் மனசைப் பால் போல வெளுப்பாக்கிக் கொண்டால், பரம சுத் தமான பிரமையோடு நம்மைப் பாலிக்க கோபாலனாக வந்து அருள்செய்வான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us