Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/விரதம் இருப்பது எப்படி?

விரதம் இருப்பது எப்படி?

விரதம் இருப்பது எப்படி?

விரதம் இருப்பது எப்படி?

ADDED : அக் 20, 2017 03:29 PM


Google News
Latest Tamil News
* கந்தசஷ்டி விரத துவக்கநாளான அக்.20 - அக் 25 வரை அதிகாலை 4:30-6:00 மணிக்குள் நீராடவேண்டும். பால், பழம் மட்டும் சாப்பிடலாம். உடல்நிலை

காரணமாக, உணவை தவிர்க்க முடியாதவர்கள் எளிய உணவு உண்ணலாம்.

* முருகனுக்குரிய மந்திரங்களான 'ஓம் சரவணபவ' 'ஓம் சரவணபவாயநம' 'ஓம் முருகா' ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜெபித்து வர வேண்டும்.

* கோயிலுக்கு குழுவாகச் சென்று, ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் 'அரோகரா' கோஷமிடலாம்.

உ.ம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.

* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.

* திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம், சண்முக கவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.

* மலைக்கோயில்களில் மலையை வலம் வருவது புண்ணியம்.கோயில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது.

* பணிக்குச் செல்பவர்கள் பணி நேரத்துக்கேற்ப மந்திரம் சொல்லலாம்.

* விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் விலகி, குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us