Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/குழந்தைகளுக்கு பாதிப்பா? குணப்படுத்துவார் பாலமுருகன்

குழந்தைகளுக்கு பாதிப்பா? குணப்படுத்துவார் பாலமுருகன்

குழந்தைகளுக்கு பாதிப்பா? குணப்படுத்துவார் பாலமுருகன்

குழந்தைகளுக்கு பாதிப்பா? குணப்படுத்துவார் பாலமுருகன்

ADDED : ஜூன் 03, 2011 10:09 AM


Google News
Latest Tamil News
குழந்தைகளின் பால்ய வயதில் உண்டாகும் தோஷம் பாலாரிஷ்டம். ஜாதகத்தில் பாவகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஏற்படும் போது இது ஏற்படும். இதனால் ஆயுள், ஆரோக்கியம் பாதிக்கும். சில வேளைகளில் தாய், தாய்மாமன், தந்தைக்கும் தோஷத்தை ஏற்படுத்தும். கிரகச்சேர்க்கை மற்றும் தன்மையைப் பொறுத்து பாதிப்பு அமையும். குருவின் பார்வை இருக்குமானால் இந்த தோஷத்தால் பாதிப்பு வராது.

இத்தோஷம் நீங்க, குழந்தையை முருகன் கோயிலில் சுவாமிக்குத் தத்து கொடுத்து வழிபடுவர். குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்து, சந்நிதியை மூன்றுமுறை வலம் வரவேண்டும். கொடிமரத்தின் முன்போ அல்லது சந்நிதி முன்போ குழந்தையை கிடத்தி, முருகனிடம் ஒப்படைப்பதாக எண்ணி வழிபடவேண்டும். பின், அர்ச்சகரை அழைத்து பிள்ளையைப் பெற வேண்டும். அக்காலத்தில் தட்சணையாக அர்ச்சகருக்கு ஒரு படி தவிட்டைக் கொடுப்பது வழக்கம். பிள்ளைக்கும் கூட 'தவிடன்' என்று பெயர் வைப்பர். ஆனால், இப்பழக்கம் மறைந்து, தட்சணை கொடுக்கும் வழக்கம் வந்து விட்டது. இப்பரிகாரத்தின் மூலம் தோஷம் நீங்குவதோடு, முருகப்பெருமான் குழந்தையைக் காத்து அருள்புரிவான் என்பது ஐதீகம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us