ADDED : செப் 30, 2011 12:12 PM

நவராத்திரியின் ஒன்பது நாட்களும், பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, நரசிம்ஹி, சாமுண்டி, சரஸ்வதி என்று ஒன்பது கோலங்களில் அம்பிகையை வழிபடுவர். ஒன்பது நாளும் வீட்டில் பூஜை செய்ய இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று வழிபாடு செய்வர். இந்நாளில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் வழங்கும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியை வணங்கினால் நவராத்திரி விரதத்தின் முழுபலனும் கிடைக்கும்.


