ADDED : அக் 14, 2020 08:48 AM

இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் காஸ்யபர், அதிதி தம்பதிக்கு பிள்ளைகளாக இருந்தனர். இத்தம்பதி மகாவிஷ்ணுவை மகனாக அடைய விரும்பி தவத்தில் ஆழ்ந்தனர். அதை ஏற்று அதிதியின் வயிற்றில் திருவோண நட்சத்திர நாளில் வாமனராக அவதரித்தார் மகாவிஷ்ணு. 'சிரவண மங்களா' (திருவோண நாளில் மங்களமாக வந்தவனே) என மகிழ்ந்தாள் அதிதி. வாமனருக்கு 'உபேந்திரன்' என பெயருண்டு. இதற்கு 'இந்திரனின் தம்பி' என்பது பொருள்.