Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/நிலையானவன் மைப்பொலியும் கண்ணிகேள்!

நிலையானவன் மைப்பொலியும் கண்ணிகேள்!

நிலையானவன் மைப்பொலியும் கண்ணிகேள்!

நிலையானவன் மைப்பொலியும் கண்ணிகேள்!

ADDED : ஜூன் 21, 2024 01:05 PM


Google News
மால் அயனோடு இந்திரனும்

எப்பிறவியும் தேட என்னையும்

தன் இன்னருளால்

இப்பிறவி ஆட்கொண்டு

இனிப் பிறவாமே காத்து

மெய்ப் பொருள்கண் தோற்றமாய்

மெய்யே நிலைபேறாய்

எப்பொருட்கும் தானே

ஆய் யாவைக்கும் வீடாரும்

அப்பொருளாம் நம் சிவனைப்

பாடுதும்காண் அம்மானாய்!

மை தீட்டிய பெண்ணே! நான் சொல்வதைக்கேள். பிரம்மா, விஷ்ணு, இந்திரன் ஆகியோர்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் சிவபெருமானையே அடைக்கலமாக கொண்டிருக்கிறார்கள். தகுதியில்லாத என்னையும் ஒரு பொருளாக மதித்து, பிறவிப்பிணியில் இருந்து அப்பெருமான் காப்பாற்றினான். அவன் என்றும் நிலையானவன். உலகப்பொருட்கள் அனைத்தையும் ஆக்குபவன், ஒடுக்குபவன், முக்தியருள்பவன். அந்த சிவனைப் பாடி அம்மானை ஆடுவோம் என்கிறார் சிவனடியாரான மாணிக்கவாசகர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us