Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/வள்ளலுக்கு நன்றி

வள்ளலுக்கு நன்றி

வள்ளலுக்கு நன்றி

வள்ளலுக்கு நன்றி

ADDED : ஜூன் 21, 2024 12:51 PM


Google News
Latest Tamil News
இலங்கையில் ராவணவதம் முடித்து மீண்டும் அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமபிரான். பட்டாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அப்போது அனுமன் அரியணையைத் தாங்கினார். ராமரின் சகோதரர்கள் வெண்சாமரம் வீசவும், குடை பிடிக்கவும், உடைவாள் ஏந்தவும் செய்தனர். கிரீடத்தை குலகுரு சூட்டுவது தான் மரபு. அதை குலகுருவான வசிஷ்டரே செய்தார். ஆனால் அந்த கிரீடத்தை எடுத்து கொடுத்த பெருமை சடையப்பரின் முன்னோர்களைச் சேரும் என்கிறார் கவிச்சக்கரவர்த்தியான கம்பர்.

ஒருவர் சேர்த்து வைத்த புண்ணியம் அவர்களது சந்ததியைக் காக்கும். கம்பரைப் போன்ற நல்லவர்களுக்கு உதவி செய்ததால், அந்தப் புண்ணியம் அவரின் சந்ததிக்கு மட்டுமின்றி முன்னோருக்கும் சேர்ந்தது என்பதை இந்நிகழ்ச்சி காட்டுகிறது. சடையப்ப வள்ளலுக்கு நன்றி சொல்லும் விதமாக கம்பர் இவ்வாறு பாடியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us