Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/அழுதால் அருளுண்டு

அழுதால் அருளுண்டு

அழுதால் அருளுண்டு

அழுதால் அருளுண்டு

ADDED : ஜூன் 14, 2024 01:02 PM


Google News
Latest Tamil News
யானே பொய் என் நெஞ்சும்

பொய் என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால்

உன்னைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின்

தெளிவே தித்திக்கும்

மானே அருளாய் அடியேன்

உனை வந்துறுமாறே.

நான் பொய் ஒழுக்கம் கொண்டவன். என் நெஞ்சமோ வஞ்சனை மிக்கது. என் அன்பு போலியானது.

இப்படி தீவினைகளைக் கொண்டவனாக இருந்தாலும் செய்தவற்றை நினைத்து அழுதால் உன்னருளைப் பெற்று மகிழலாம்.

தேனும், அமிர்தமும், கரும்பின் சுவையும் போன்ற சிவபெருமானே. அடியார் உள்ளத்தில் இனிப்பாகத் திகழ்பவனே. கொடியவனான நானும் உன்னை வந்தடையும் வழியைக் காட்டுவாயாக என உருகுகிறார் மாணிக்கவாசகர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us