Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/செவ்வாய் தோஷம் விலக...

செவ்வாய் தோஷம் விலக...

செவ்வாய் தோஷம் விலக...

செவ்வாய் தோஷம் விலக...

ADDED : மே 10, 2024 12:40 PM


Google News
Latest Tamil News
கன்னியம் பிகைசேய் போற்றி

கலைமதிப் புலவா போற்றி

பொன்னியந் துறையாய் போற்றி

பூந்துறை நாடா போற்றி

இன்னிலம் இயம்ப வானோர்

இறைஞ்ச நான்மறை நின்றேத்தச்

சென்னியங் கிரியில் வாழும் தேவனே போற்றி போற்றி

ஆவலங் கொழிந்தார் போற்றி

அடிதொழும் அடிகேள் போற்றி

பூவலங் கொண்டாய் போற்றி

புலாதிகட் கணுாகாய் போற்றி

கேவலங் கடந்தாய் போற்றி

கிளரொளிப் பொருளே போற்றி

சேவலங் கொடியாய் போற்றி

சிரகிரி வாழ்வே போற்றி

மோகற மொழிந்தாய் போற்றி

முராரி மாமருகா போற்றி

யாகர மறையாய் போற்றி

யாறுமுக விறைவா போற்றி

மாகர வயிலாய் போற்றி

மரகத மயிலாய் போற்றி

சேகர கிரியாய் போற்றி

சிரகிரி வாழ்வே போற்றி

தென் செய்தே னிமிர்கூ தாளஞ்

செச்சை பூங் குரவ நீப

மின்செய்பூ ணிமைக்குந் திண்டோள்

மிலைந்த பொன் மாலை யோடு

மின் சொலும் பொருளு மின்றி

வெளிறியீர்ஞ் சுவைய திர்ந்த

புன்சொலாற் றமியேன் சாற்றும்

தொடையலும் புனைவாய் போற்றி

கொங்கு நாடு எனப் போற்றப்படும் கோயம்புத்துாரில் உள்ள மலைக்கோயில் சென்னிமலை. புஷ்பகிரி, மகுடகிரி, சிரகிரி என்றும் இதற்கு பெயர்கள் உண்டு. இங்குள்ள முருகன் தன்னை தானே பூஜித்த பெருமை கொண்டவர். இங்குள்ள மாமாங்கத் தீர்த்தம்

12 ஆண்டுக்கு ஒரு முறை பொங்கும் சிறப்புடையது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது. கந்த சஷ்டிக் கவசத்தை தேவராய சுவாமிகள் அரங்கேற்றியது இங்கு தான். 1984ல் இரட்டை மாட்டுவண்டியில் பூட்டிய காளைகள் மலையேறிய அதிசயம் இங்கு நடந்தது.

இத்தலத்தின் புகழ் பாடும் நுால்களில் சென்னிமலை தலபுராணம் சிறப்பானது. இதை இயற்றியவர் சரவண மாமுனிவர். செவ்வாய் தோஷம் போக்கும் சென்னிமலை முருகனை வழிபடுவோருக்கு வாழ்வில் எல்லா நலன்களும் உண்டாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us