ADDED : மார் 08, 2024 03:01 PM
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகி என்னும் பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தைக் கக்கியது. அப்போது பாற்கடலில் இருந்தும் விஷம் வெளிப்பட்டது. இரண்டு விஷங்களும் ஒன்று சேர்ந்து கருமை பரவியது. 'ஆலம்' என்பதற்கு விஷம் என பொருள். இரு விஷம் இணையவே 'ஆலாலம்' என்றனர். பேச்சு வழக்கில் 'ஆலகாலம்' என்றானது.