Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/விரதமிருக்கும் முறை

விரதமிருக்கும் முறை

விரதமிருக்கும் முறை

விரதமிருக்கும் முறை

ADDED : மார் 08, 2024 02:57 PM


Google News
Latest Tamil News
சிவராத்திரியன்று சாப்பிடாமல் இருப்பது நல்லது. முடியாதவர்கள் காலை, இரவில் பால், பழம் சாப்பிட்டு மதியம் ஒருவேளை மட்டும் சாப்பிடலாம்.

'ஓம் நமசிவாய' 'ஓம் சிவாய நம' மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜபிக்க வேண்டும்.

இரவு சிவன் கோயிலில் நான்குகால அபிஷேகம் தரிசிக்க வேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவ அபிஷேகத்தை தரிசிப்பது புறவழிபாடு. அகவழிபாடாக, “சிவபெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனை ஞானப் பாலாக்கி அருள வேண்டும். பாவங்களைப் போக்கி மகிழ்ச்சி தர வேண்டும்” என பிரார்த்திக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us