Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/பத்தாயிரம் தீபம்

பத்தாயிரம் தீபம்

பத்தாயிரம் தீபம்

பத்தாயிரம் தீபம்

ADDED : ஜன 23, 2025 11:20 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கங்கை கொண்டானில் அவதரித்தவர் கோடகநல்லுார் சுந்தர சுவாமிகள். நெல்லையப்பர் கோயிலில் தை அமாவாசையன்று பத்ர தீப வழிபாட்டை 1884ல் ஏற்படுத்தியவர் இவரே. குடும்ப சூழல், பொருளாதார நெருக்கடியால் பிதுர்கர்மா செய்ய முடியாதவர்கள் பத்ர தீப வழிபாட்டை செய்கின்றனர்.

பத்தாயிரம் தீபம் என்பதே பத்தர தீபம், பத்ர தீபம் என காலப்போக்கில் மருவி விட்டது.

அன்று மதியம் சுவாமி அம்மனுக்கு அபிேஷகம் நடக்கும். மாலையில் கோயில் எங்கும் பக்தர்கள் மூலம் பத்தாயிர தீபம் ஏற்றப்படும். பின்னர் ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்மனும், நெல்லையப்பரும் எழுந்தருள்வர். இதை தரிசித்தால் பித்ரு தோஷம் மறையும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us