Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/கவலை எதற்கு?

கவலை எதற்கு?

கவலை எதற்கு?

கவலை எதற்கு?

ADDED : ஆக 22, 2024 05:46 PM


Google News
கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்னும் அரக்கியையும், பகாசுரன் என்ற அரக்கனையும் கொன்றான் குழந்தை கண்ணன்.

இதை கேள்விப்பட்ட பூதனையின் சகோதரன் அகாசுரன் ஆயர்பாடிக்கு வந்தான். கண்ணன், அவனது அண்ணன் பலராமன், ஆயர்பாடி சிறுவர்களையும் கொல்ல முயன்றான். விரும்பிய வடிவத்தில் தோன்றும் ஆற்றல் அசுரனுக்கு இருந்தது. மலைப் பாம்பாக உருவெடுத்து பயமுறுத்தினான். அவனுடைய வாய் குகை போல இருந்தது. ஆனால் 'கண்ணன் இருக்க கவலை எதற்கு?' என அசுரனைப் பார்த்த சிறுவர்கள் சிரித்தனர்.

அசுரனின் வாய்க்குள் நுழைந்த கண்ணன் தன் தோற்றத்தை பெரிதாக்கவே அவனது தலை சுக்குநுாறாக வெடித்தது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us