Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/ஆற்றல் தரும் அரிய மந்திரம்

ஆற்றல் தரும் அரிய மந்திரம்

ஆற்றல் தரும் அரிய மந்திரம்

ஆற்றல் தரும் அரிய மந்திரம்

ADDED : செப் 30, 2011 12:11 PM


Google News
Latest Tamil News
'ஓம்' என்பது பிரணவ மந்திரமாகும். பிரபஞ்சத்தை இயக்கும் இறைவனின் ஒலி வடிவமே (நாத தத்துவம்) இம்மந்திரமாகும். கடலலை எழுப்பும் ஓசையும், சங்கில் எழும் நாதமும் பிரணவம் என்பர். பர்வத ராஜகுமாரியான பார்வதிக்குரிய திருநாமங்களில் 'உமா' என்பது உயர்வானது. இதனையே 'சக்தி பிரணவம்' என்று சொல்வர். சக்தி என்பதற்கு ஆற்றல் என்பது பொருள். அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையே 'ஓம்' என்பதுபோல, உமா' என்னும் மந்திரத்திலும் இந்த எழுத்துக்கள் உள்ளன. தேவிக்குரிய மூலமந்திரம்'ஓம் உமாதேவ்யை நமஹ' என்பதாகும். நவராத்திரி நாட்களில் இதை ஜெபிப்பவர் அம்பிகை அருளால் அரிய செயல்களையும் எளிதாக முடிக்கும் ஆற்றலைப் பெறுவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us