Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/400 பங்கு லாபம்!

400 பங்கு லாபம்!

400 பங்கு லாபம்!

400 பங்கு லாபம்!

ADDED : செப் 08, 2017 09:35 AM


Google News
Latest Tamil News
ஆழ்வார்கள் பாடிய 4ஆயிரம் பாடல்களை தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே 'நாலாயிர திவ்ய பிரபந்தம்' எனப்படுகிறது.இவர் ஒருமுறை 'ஆராவமுதே' என்று தொடங்கும் திவ்ய பிரபந்த பாசுரத்தை சிலர் பாடக் கேட்டு மெய் மறந்தார். அதில் 'ஓராயிரத்துள் இப்பத்தும்' என்னும் அடி வந்தது. அவர்களிடம் “அன்பர்களே! நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்து பாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே?” எனக் கேட்டார். அவர்களுக்கு இதற்கான பதில் தெரியவில்லை. ஆனால் அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்குரிய வழிமுறையை கூறினர். “மதுரகவியாழ்வார் பாசுரங்களை யார் ஒருவர் 12 ஆயிரம் முறை பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள்புரிவார் '' என்றனர்.

அதன்படியே, நாதமுனிகள் பத்து பாடல்கள் மூலம் மதுர கவியாழ்வாரின் அருளால் நானூறு பங்கு லாபமாக நாலாயிரம் பாசுரங்களை பெற்றார்.

பாடல்களுக்கு இசையமைத்து 'திவ்ய பிரபந்தம்' என்றும் பெயரிட்டார். தன் சீடர்களான உய்யக்கொண்டார், குருகை காவலப்பன், மேலை அகத்தாழ்வான் மூலம் பாசுரங்களை கோயில்களில் பாடவும் ஏற்பாடு செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us