/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/இனிமை நிறைந்த உலகமிருக்கு... இதிலே உனக்கு கவலை எதற்கு?இனிமை நிறைந்த உலகமிருக்கு... இதிலே உனக்கு கவலை எதற்கு?
இனிமை நிறைந்த உலகமிருக்கு... இதிலே உனக்கு கவலை எதற்கு?
இனிமை நிறைந்த உலகமிருக்கு... இதிலே உனக்கு கவலை எதற்கு?
இனிமை நிறைந்த உலகமிருக்கு... இதிலே உனக்கு கவலை எதற்கு?
ADDED : பிப் 25, 2013 05:51 PM

* கடவுளுக்கும், அவனது அடியார்களுக்கும் பணமுள்ளவர்கள் பொருள் வழங்க வேண்டும். ஏழைகள் அவனது திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.
* வாழ்வில் துன்ப துயரங்களை அடைந்த பின்னர் தான் கடவுளைப் பலரும் தேடுகின்றனர். ஆனால், இளமையிலும், நன்றாக இருக்கிற காலத்திலும் இறைவனைத் தேடுபவனே பேறு பெற்றவன்.
* உங்கள் மனதில் குற்றம் இருப்பதாலேயே நீங்கள் துன்பப்படுகிறீர்கள். நல்ல நினைவுகளை மனதில் இருத்திக்கொண்டால், இதற்கு அவசியமே இராது.
* தவறுவது மனித இயல்பு. அதைப் பெரிதாக எண்ண வேண்டுவதில்லை. அதனை மீண்டும் மீண்டும் நினைப்பதால் துன்பமே அதிகரிக்கிறது.
* கருணையும் இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்று அழைக்க இயலாது.
* நம்பிக்கையும், மனஉறுதியும் நம் வாழ்விற்கு அடிப்படை. இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாமே இருந்த மாதிரி தான்.
* இந்த உலகம் இனிமையான தோட்டம். இங்கே இறைவனை நேசிப்பவனுக்கு கவலை கிடையாது. எப்போதும் இறைசிந்தனையில் இருப்பவன் எதற்கும் அஞ்சுவதில்லை. அவன் புண்ணியவானும் கூட.
* மனமே எல்லாமுமாக இருக்கிறது. மனம் தூய்மை அடைந்தால் எல்லா நன்மையும் உண்டாகும்.
* உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைக் காணாதீர்கள். மாறாக உங்களது குற்றங்குறைகளை எண்ணிப் பாருங்கள்.
* ஏதாவது ஒரு உயிருக்கு மகிழ்ச்சியை உன்னால் அளிக்க முடியுமானால், உன் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டதாக அர்த்தம்.
* சோம்பலாக இருப்பதால் உடல் மட்டுமில்லாமல் மனமும் கெட்டுப் போய் விடும். அதனால் எப்போதும் சுறுசுறுப்பாய் பணியில் ஈடுபடுங்கள்.
* ஒரு பொருள் அற்பமாக இருந்தால் கூட, அதை இகழ்ந்து பேசக்கூடாது. நீங்கள் ஒரு பொருளை மதித்தால் அதுவும் <உங்களை மதிக்கும். செய்கிற செயல் மிக அற்பமானதாக இருந்தால் கூட, அதையும் மிக்க மரியாதையுடன் செய்ய வேண்டும்.
* ஏதேனும் கஷ்டம் வந்து விட்டால், தனியே அமர்ந்து கண்ணீர் மல்க கடவுளை வேண்டுங்கள். அவன் உங்கள் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான். பின்பு, உங்களுக்கு எல்லாவற்றையும் விளங்கும்படி செய்வான்.
* மரணம் எப்போது நம்மை அணுகும் என்பது நிச்சயமில்லை. எனவே, ஒருவன் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் நல்ல செயல்களைச் செயலாக்கி விட வேண்டும். அதற்கென, ஒரு குறிப்பிட்ட காலத்தை எதிர்பார்த்திருக்கக் கூடாது.
* நமக்கு முக்கியமானது அன்பே. இதன்மூலமே குடும்பம் முன்னேற வழியிருக்கிறது.
* சந்தனத்தை தொட்டால் கை மணப்பது போல, இறைவனைத் தியானித்தால் மனம் மணக்கும்.
கேட்கிறார் சாரதாதேவியார்
* வாழ்வில் துன்ப துயரங்களை அடைந்த பின்னர் தான் கடவுளைப் பலரும் தேடுகின்றனர். ஆனால், இளமையிலும், நன்றாக இருக்கிற காலத்திலும் இறைவனைத் தேடுபவனே பேறு பெற்றவன்.
* உங்கள் மனதில் குற்றம் இருப்பதாலேயே நீங்கள் துன்பப்படுகிறீர்கள். நல்ல நினைவுகளை மனதில் இருத்திக்கொண்டால், இதற்கு அவசியமே இராது.
* தவறுவது மனித இயல்பு. அதைப் பெரிதாக எண்ண வேண்டுவதில்லை. அதனை மீண்டும் மீண்டும் நினைப்பதால் துன்பமே அதிகரிக்கிறது.
* கருணையும் இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்று அழைக்க இயலாது.
* நம்பிக்கையும், மனஉறுதியும் நம் வாழ்விற்கு அடிப்படை. இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாமே இருந்த மாதிரி தான்.
* இந்த உலகம் இனிமையான தோட்டம். இங்கே இறைவனை நேசிப்பவனுக்கு கவலை கிடையாது. எப்போதும் இறைசிந்தனையில் இருப்பவன் எதற்கும் அஞ்சுவதில்லை. அவன் புண்ணியவானும் கூட.
* மனமே எல்லாமுமாக இருக்கிறது. மனம் தூய்மை அடைந்தால் எல்லா நன்மையும் உண்டாகும்.
* உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைக் காணாதீர்கள். மாறாக உங்களது குற்றங்குறைகளை எண்ணிப் பாருங்கள்.
* ஏதாவது ஒரு உயிருக்கு மகிழ்ச்சியை உன்னால் அளிக்க முடியுமானால், உன் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டதாக அர்த்தம்.
* சோம்பலாக இருப்பதால் உடல் மட்டுமில்லாமல் மனமும் கெட்டுப் போய் விடும். அதனால் எப்போதும் சுறுசுறுப்பாய் பணியில் ஈடுபடுங்கள்.
* ஒரு பொருள் அற்பமாக இருந்தால் கூட, அதை இகழ்ந்து பேசக்கூடாது. நீங்கள் ஒரு பொருளை மதித்தால் அதுவும் <உங்களை மதிக்கும். செய்கிற செயல் மிக அற்பமானதாக இருந்தால் கூட, அதையும் மிக்க மரியாதையுடன் செய்ய வேண்டும்.
* ஏதேனும் கஷ்டம் வந்து விட்டால், தனியே அமர்ந்து கண்ணீர் மல்க கடவுளை வேண்டுங்கள். அவன் உங்கள் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான். பின்பு, உங்களுக்கு எல்லாவற்றையும் விளங்கும்படி செய்வான்.
* மரணம் எப்போது நம்மை அணுகும் என்பது நிச்சயமில்லை. எனவே, ஒருவன் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் நல்ல செயல்களைச் செயலாக்கி விட வேண்டும். அதற்கென, ஒரு குறிப்பிட்ட காலத்தை எதிர்பார்த்திருக்கக் கூடாது.
* நமக்கு முக்கியமானது அன்பே. இதன்மூலமே குடும்பம் முன்னேற வழியிருக்கிறது.
* சந்தனத்தை தொட்டால் கை மணப்பது போல, இறைவனைத் தியானித்தால் மனம் மணக்கும்.
கேட்கிறார் சாரதாதேவியார்