Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/தஞ்சாவூர் வெள்ளை விநாயகர் கோயில்

தஞ்சாவூர் வெள்ளை விநாயகர் கோயில்

தஞ்சாவூர் வெள்ளை விநாயகர் கோயில்

தஞ்சாவூர் வெள்ளை விநாயகர் கோயில்

ADDED : செப் 17, 2012 10:14 AM


Google News
Latest Tamil News
தஞ்சாவூரிலுள்ள வல்லப விநாயகர் கோயில் பேச்சுவழக்கில் வெள்ளை விநாயகர் கோயில் எனப்படுகிறது. வல்லபை என்பவள், ஒரு சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சிவனிடம் முறையிட்டனர். மனித உடலும், மிருகமுகமும் கொண்ட ஒருவரால் தான் தன் சாபம் நீங்கும் என்று அவளுக்கு சாபவிமோசனம் அளிக்கப்பட்டது. அவள் பல அசுரக்குழந்தைகளைப் பெற்றுத் தள்ளினாள். விநாயகர் அவளை அடக்கி மடியில் இருத்திக்கொண்டார். அவளது கோரிக்கைக்கு இணங்க 'வல்லப விநாயகர்' என்ற பெயரும் பெற்றார். இந்தக் கோயிலில் விநாயகருக்குள் (மூலவர்) வல்லபா தேவி இல்லாவிட்டாலும், அவருக்குள் ஐக்கியமாகி, அரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். ஆனால், உற்சவ விநாயகர் வல்லபை சகிதமாகக் காட்சி தருவது சிறப்பு.

இருப்பிடம்:

தஞ்சாவூர் கீழவாசல்.

திறக்கும் நேரம்:

காலை 6 -10, மாலை 5 - இரவு 8.

போன்:

96459 59997





      Our Apps Available On




      Dinamalar

      Follow us