Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/கடமையைச் செய்வதில் தானே ஆனந்தம்

கடமையைச் செய்வதில் தானே ஆனந்தம்

கடமையைச் செய்வதில் தானே ஆனந்தம்

கடமையைச் செய்வதில் தானே ஆனந்தம்

ADDED : டிச 13, 2019 09:58 AM


Google News
Latest Tamil News
* பலமுறை வற்புறுத்திய பின் ஒரு செயலை முடிப்பது பண்பாகாது. தானே தனக்குரிய கடமையைச் செய்வதே மகிழ்ச்சிக்கான வழி.

* மனம் உற்சாகமுடன் இருக்க அதிகாலையில் எழுவதே நல்லது.

* பெரியவர்கள் இருக்குமிடத்தில் பேசும் போது, வாதங்களை முகத்தில் அடித்தாற் போல சொல்ல கூடாது.

* கணவர், குடும்பம், தர்மம் என நல்லனவற்றைக் காப்பதே பெண்களுக்கு பெருமை.

* கெட்டவருக்கு உதவினால் அழிவு உண்டாகும். நல்லவருக்கு உதவினால் நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்கும்.

* நல்ல நுால்கள், பெரியோரின் அறிவுரைகளை ஒருபோதும் மறக்க கூடாது.

* நல்லவரைக் காண்பது, அவரது அறிவுரை கேட்பதும், அவரோடு பழகுவதும், அவரது நற்குணத்தைப் புகழ்வதும் நன்மையளிக்கும்.

* பெரிய மடல்கள் கொண்ட தாழம்பூவை விட, சிறிய இதழ்கள் கொண்ட மகிழம்பூவிற்கு மணம் அதிகமுண்டு. கடலில் நிறைய நீர் இருந்தும் தாகம் தணிக்காது. ஆனால் ஊற்று நீர் குறைவாக இருந்தாலும் குடிக்கலாம்.

* பொன் குடம் உடைந்த பின்னும் பொன்னாகவே இருக்கும். அது போல பண்புள்ள செல்வந்தர் வறுமை அடைந்தாலும் முடிந்த வரை உதவிகளை செய்வர்.

* உடலோடு பிறந்து நோய் நம்மைக் கொல்கிறது. அதுபோல உடன்பிறந்தவர்களால் தீமை ஏற்படலாம். எங்கோ மலையில் விளைந்த மூலிகை நோய் தீர்ப்பது போல அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் கூட நமக்கு உதவலாம்.

* கல் பிளந்தால் மீண்டும் இணையாது. கோபத்தால் பிரிந்த கெட்டவர்கள் சேர மாட்டார்கள். நீரில் ஏற்பட்ட பிளவு தோன்றிய பொழுதே மறையும். அது போல நல்லவர்களின் கோபம் உடனே மறையும்.

அறிவுறுத்துகிறார் அவ்வையார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us