Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

ADDED : ஜன 23, 2020 03:10 PM


Google News
Latest Tamil News
* உற்றார், உறவினரிடம் அன்புடன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டாகும்.

* பிறரைக் குற்றம் சொல்லி பழகி விட்டால் உறவினர்கள் நம்மை விரும்ப மாட்டார்கள்.

* சிவபெருமானை வழிபடுவதே சிறந்த தவம்.

* குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே சிறந்த பண்பாகும்.

* ஊருடன் ஒத்து போகாமல் பகை கொள்பவன் குடும்பத்துடன் அழிவான்.

* நல்லறிவு உள்ளவர்களுக்கு யாரிடமும் கோபம், பகை உண்டாகாது.

* ஊருக்கு உழைப்பவனாக இருங்கள், யாரிடமும் கடிந்து பேசாதீர்கள்.

* நல்லவர்களுடன் உறவு கொண்டு வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

* வறுமையில் வாடுபவர்களை இழிந்த வார்த்தைகள் சொல்லி ஏளனம் செய்யாதீர்கள்.

* பிறருக்கு முற்பகலில் தீமை செய்தால், அதுவே பிற்பகலில் நமக்கு பெருந்தீங்காக முடியும்.

* கூரிய அம்பு போல் திறமை இருந்தாலும் தற்பெருமை கொண்டு பேசாதீர்கள்.

* இல்லற வாழ்வே சிறந்தது. இதை விட உயர்ந்த தர்மம் வேறில்லை.

* முதன் முதலில் நாம் அறிந்த கடவுள்கள் தாயும், தந்தையும் தான்.

* ஒருவன் தன் பரம்பரையைக் காத்திட மனைவியோடு கூடிக் குழந்தைப்பேறுடன் வாழ்வதே சிறப்பு.

* நெருங்கிய நண்பனிடம் கூட, ஒருவன் தன் வறுமையை சொல்வது கூடாது.

* பிறரது மனம் வருந்தும் விதத்தில் பேசுவதோ, செயல்படவோ வேண்டாம்.

சொல்கிறார் அவ்வையார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us