ADDED : நவ 24, 2023 03:49 PM

* கடவுள் மீது நம்பிக்கை வைத்து முயற்சியை தொடங்கு. எல்லாம் வெற்றியாகும்.
* பிறருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அன்பாக பேசு.
*உணவிலும் உடையிலும் ஆடம்பரம் செய்யாதே. மீறினால் அத்தியாவசிய பொருட்களுக்கு கஷ்டப்படுவாய்.
*கடவுளை நினைத்துக்கொண்டே எந்தவொரு செயலிலும் ஈடுபடு.
* மனிதனை மனிதனாக வாழச் செய்யவே மகான்கள் அவதரிக்கின்றனர்.
* உடம்பின் மீது அக்கறை காட்டு.
* பிறர் தவறாக பேசினால் அந்த இடத்தை விட்டு உடனே நகர்ந்து விடு.
* சந்தோஷமாக வாழ்ந்தாலே போதும். அதுவே வாழ்க்கையின் பாதி பலமாகும்.
* இயற்கையின் ரகசியத்தை உன்னால் அறிய முடியாது.
* உண்மையானது, உண்மையற்றது எது என்பதை உணர்ந்தவனே அறிவாளி.
* தற்பெருமை, அகங்காரம் இல்லாத இதயத்தில் கடவுள் வாழ்கிறார்.
* பிறருக்கு உணவு அளிப்பவரே சிறந்த கொடையாளி.
* யாரிடமும் வீண் விவாதம் செய்யாதே. மீறினால் மனஅமைதியை இழப்பாய்.
* பிறர் நலனில் அக்கறை காட்டு. கடவுளின் அன்பு கிடைக்கும்.
* நல்ல மனதுடன் வாழ்ந்தாலே யாருக்கும் பயப்படத் தேவையில்லை.
* உனக்கு தீமை செய்தவரை பழிவாங்க நினைக்காதே.
சொல்கிறார் ஷீரடி சாய்பாபா
* பிறருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அன்பாக பேசு.
*உணவிலும் உடையிலும் ஆடம்பரம் செய்யாதே. மீறினால் அத்தியாவசிய பொருட்களுக்கு கஷ்டப்படுவாய்.
*கடவுளை நினைத்துக்கொண்டே எந்தவொரு செயலிலும் ஈடுபடு.
* மனிதனை மனிதனாக வாழச் செய்யவே மகான்கள் அவதரிக்கின்றனர்.
* உடம்பின் மீது அக்கறை காட்டு.
* பிறர் தவறாக பேசினால் அந்த இடத்தை விட்டு உடனே நகர்ந்து விடு.
* சந்தோஷமாக வாழ்ந்தாலே போதும். அதுவே வாழ்க்கையின் பாதி பலமாகும்.
* இயற்கையின் ரகசியத்தை உன்னால் அறிய முடியாது.
* உண்மையானது, உண்மையற்றது எது என்பதை உணர்ந்தவனே அறிவாளி.
* தற்பெருமை, அகங்காரம் இல்லாத இதயத்தில் கடவுள் வாழ்கிறார்.
* பிறருக்கு உணவு அளிப்பவரே சிறந்த கொடையாளி.
* யாரிடமும் வீண் விவாதம் செய்யாதே. மீறினால் மனஅமைதியை இழப்பாய்.
* பிறர் நலனில் அக்கறை காட்டு. கடவுளின் அன்பு கிடைக்கும்.
* நல்ல மனதுடன் வாழ்ந்தாலே யாருக்கும் பயப்படத் தேவையில்லை.
* உனக்கு தீமை செய்தவரை பழிவாங்க நினைக்காதே.
சொல்கிறார் ஷீரடி சாய்பாபா