ADDED : ஆக 13, 2024 11:17 AM

பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு அருகிலுள்ள ஜெயந்திமாஜ்ரி பகுதியிலுள்ள குன்றின் மீதுள்ள அம்மன் ஜெயந்திதேவி. பல ஆண்டுக்கு முன்பு இமாச்சல் பிரதேசத்தில் இருந்து வந்த இளவரசிக்காக இங்கு அம்மன் கோயில் கொண்டாள். வெற்றித் திருமகளான இவளை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும்.
பராசக்தியின் அருளால் ஆயுதங்களைப் பெற்ற பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றனர். இதற்கு நன்றியாக இமாச்சல் பிரதேசத்தில் ஜெயந்திதேவிக்கு கோயில் கட்டினர். காங்கிரா பகுதி மக்களின் குலதெய்வமான இவள் சண்டிகருக்கு வந்த வரலாறு சுவாரஸ்யமானது.
காங்கிரா நாட்டு மன்னரின் மகளுக்கும், சண்டிகருக்கு அருகிலுள்ள ஹாத்நாயூர் மன்னரின் மகனுக்கும் திருமணம் நடந்தது. ஜெயந்தி தேவியின் பக்தையான இளவரசி தன்னுடன் வரும்படி அம்மனிடம் பிரார்த்தனை செய்தாள். அதை ஏற்று அம்மனும் வந்ததால் பல்லக்கு கனமாக இருப்பதை பணியாளர்கள் உணர்ந்தனர். உடனடியாக பூஜாரியை வரவழைத்து, கல் ஒன்றில் அம்மனை ஆவாஹனம் செய்து ஒரு பல்லக்கில் ஏற்றினார்.
இந்த கல்லை ஜெயந்திமாஜ்ரி குன்றின் மீது பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினர். 100 படிகளில் ஏறினால் ஜெயந்திதேவி கோயிலை அடையலாம். பளபளப்பான ஆடை, பூக்களுடன் பளிங்குக்கல் சிலையாக கருவறையில் காட்சி தருகிறாள்.
சிவன், கணேஷ், லட்சுமி, லோக்தா தேவி, பால சுந்தரி சன்னதிகள் உள்ளன. மாசிபவுர்ணமி, நவராத்திரி நாட்களில் விருப்பம் நிறைவேற விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
எப்படி செல்வது: சண்டிகரில் இருந்து 15 கி.மீ.,
விசேஷ நாள்: ஆவணி, மாசி பவுர்ணமி, நவராத்திரி.
நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி
தொடர்புக்கு: 96532 31469
அருகிலுள்ள கோயில்: சண்டிகர் 31வது செக்டாரில் கார்த்திகேய சுவாமி, 15 கி.மீ., (குழந்தை வரம் பெற...)
நேரம்: காலை 6:00 - 11:30 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0172 - 261 1191
பராசக்தியின் அருளால் ஆயுதங்களைப் பெற்ற பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றனர். இதற்கு நன்றியாக இமாச்சல் பிரதேசத்தில் ஜெயந்திதேவிக்கு கோயில் கட்டினர். காங்கிரா பகுதி மக்களின் குலதெய்வமான இவள் சண்டிகருக்கு வந்த வரலாறு சுவாரஸ்யமானது.
காங்கிரா நாட்டு மன்னரின் மகளுக்கும், சண்டிகருக்கு அருகிலுள்ள ஹாத்நாயூர் மன்னரின் மகனுக்கும் திருமணம் நடந்தது. ஜெயந்தி தேவியின் பக்தையான இளவரசி தன்னுடன் வரும்படி அம்மனிடம் பிரார்த்தனை செய்தாள். அதை ஏற்று அம்மனும் வந்ததால் பல்லக்கு கனமாக இருப்பதை பணியாளர்கள் உணர்ந்தனர். உடனடியாக பூஜாரியை வரவழைத்து, கல் ஒன்றில் அம்மனை ஆவாஹனம் செய்து ஒரு பல்லக்கில் ஏற்றினார்.
இந்த கல்லை ஜெயந்திமாஜ்ரி குன்றின் மீது பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினர். 100 படிகளில் ஏறினால் ஜெயந்திதேவி கோயிலை அடையலாம். பளபளப்பான ஆடை, பூக்களுடன் பளிங்குக்கல் சிலையாக கருவறையில் காட்சி தருகிறாள்.
சிவன், கணேஷ், லட்சுமி, லோக்தா தேவி, பால சுந்தரி சன்னதிகள் உள்ளன. மாசிபவுர்ணமி, நவராத்திரி நாட்களில் விருப்பம் நிறைவேற விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
எப்படி செல்வது: சண்டிகரில் இருந்து 15 கி.மீ.,
விசேஷ நாள்: ஆவணி, மாசி பவுர்ணமி, நவராத்திரி.
நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி
தொடர்புக்கு: 96532 31469
அருகிலுள்ள கோயில்: சண்டிகர் 31வது செக்டாரில் கார்த்திகேய சுவாமி, 15 கி.மீ., (குழந்தை வரம் பெற...)
நேரம்: காலை 6:00 - 11:30 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0172 - 261 1191