Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/திருடனின் டைரி

திருடனின் டைரி

திருடனின் டைரி

திருடனின் டைரி

ADDED : மே 15, 2023 01:42 PM


Google News
Latest Tamil News
இலங்கையிலுள்ள பழமையான முருகன் கோயில் கதிர்காமத்தில் உள்ளது. கதிர் என்றால் ' ஒளி'. சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து ஒளிப்பிழம்பாக வந்ததால் முருகனுக்கு 'கதிர்வேலன்' என்று பெயர். ஒளியாகத் தோன்றிய முருகன் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவராக இருப்பதால் இத்தலம் 'கதிர்காமம்' எனப்பட்டது. கதிரமலை, கதிர்காமன், கதிரேசன் என்னும் இலங்கையில் குழந்தைகளுக்கு பெயரிடும் வழக்கம் உள்ளது.

17ம் நுாற்றாண்டில் போர்த்துக்கீசிய கொள்ளையர் கும்பல் ஒன்று இத்தலத்திற்கு வந்தது. இது குறித்து ரீபெய்ரோ என்பவர் தன் டைரி குறிப்பில், '' எங்கள் கும்பலில் உள்ள ஐந்து பேர் ஒவ்வொருவராக கதிர்காமம் கோயிலுக்கு கொள்ளையடிக்க வரிசையாக அனுப்பப்பட்டோம். செல்லும் வழியில் பைத்தியம் போல புத்தி தடுமாற்றம் அடைந்து உளறத் தொடங்கினோம். திருடும் நோக்கம் கடைசி வரை ஒருவருக்கும் கைகூடவில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us