Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மாறியது மனசு

மாறியது மனசு

மாறியது மனசு

மாறியது மனசு

ADDED : ஆக 09, 2024 07:44 AM


Google News
Latest Tamil News
''வரம் தரும் வள்ளல் அனுமன். இவர் இப்படி இருக்க காரணம் என்ன'' எனக் கேட்டார் காஞ்சி மஹாபெரியவர். பதில் தெரியாமல் பக்தர்கள் அமைதியாக இருந்தனர்.

அவர்களுக்கு சுவாமிகள் விளக்கம் அளித்தார்.

''போர்க்களத்தில் ராமர் எய்த அம்பு, ராவணனின் உயிரைப் பறித்தது. அவன் விழுந்ததைக் கண்ட வானரங்கள் மகிழ்ச்சியால் குதித்தன. போர்க்களத்தை விட்டு புறப்பட்ட அனுமன் உடனடியாக அசோக வனத்தை அடைந்தார். எவ்வளவு கஷ்டங்களைச் சகித்துக் கொண்டு பிராட்டியார் இருக்கிறார் என்பதை அறிந்தவர் அல்லவா அவர்.

ராமரின் வெற்றியை 'ஸ்ரீராமஜெயம்' என மணலில் எழுதிக் காட்டினார். சீதை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 'அஞ்சனை மைந்தனே... நீ வாழ்க'' என வாழ்த்தினாள்.

அப்போது அரக்கியரைப் பார்த்த அவர், 'பிராட்டியாருக்கு அளவில்லாத துன்பம் கொடுத்தவர்கள் அல்லவா இவர்கள்' என பழிவாங்கத் துடித்தார். அவரது கோபத்தைக் கண்ட அரக்கியர் நடுங்கினர். ஆனால் எல்லா உயிர்களுக்கும் தாயாக இருப்பவள் தானே என்பதை உணரச் செய்தாள்.

''அஞ்சனை மைந்தனே! தப்பு செய்யாதவர் ஒருவருமில்லை. அரக்கியருக்கு தீங்கு செய்ய நினைக்காதே! இவர்கள் என்ன செய்வார்கள்? மன்னரின் கட்டைளையை ஏற்று நடப்பது தானே இவர்களின் பணி. இப்போது ராவணன் தம்பி விபீஷணன் மன்னராகி விட்டதால் இனி அவரின் கட்டளைப்படி நமக்கு உதவி செய்வார்கள்.

பிராட்டியின் உபதேசத்தால் கோபத்தை கைவிட்டு அன்பு மயமானார். கருணைக்கடலான அனுமனை வழிபட்டால் நாம் கேட்டது கிடைக்கும்'' என்றார் காஞ்சி மஹாபெரியவர்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us