Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/கதை கேட்போமா...

கதை கேட்போமா...

கதை கேட்போமா...

கதை கேட்போமா...

ADDED : ஆக 13, 2024 10:54 AM


Google News
பத்ரசிவன் என்ற மன்னரின் மனைவி கரசந்திரிகா. இவர்களுக்கு சியாமபாலா என்னும் மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தனக்கு ஒரு மகன் இருந்தால் அரண்மனையிலேயே இருப்பானே என கரசந்திரிகா கவலைப்பட்டாள். அவளிடம் ஒரு வயதான சுமங்கலி வடிவில் தோன்றிய மகாலட்சுமி, 'வரலட்சுமி விரதம் இருந்தால் குழந்தை வரம் கிடைக்கும்' என தெரிவித்தாள். ஆனால் அவள் 'எனக்கு புத்தி சொல்ல நீ யார்?' என அலட்சியம் செய்தாள்.

உடனே அவளின் மகளான சியாமபாலா வீட்டுக்குச் சென்று நடந்ததை மகாலட்சுமி தெரிவித்தாள். தன் தாய்க்காக மன்னிப்பு கேட்டதோடு விரதமும் மேற்கொண்டாள் சியாமபாலா. அதன் பயனாக செழிப்புடன் வாழ்ந்தாள். கரசந்திரிகாவோ பணத்தை எல்லாம் இழந்து ஏழையானாள்.

இந்நிலையில் சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை தாய்வீட்டுக்கு அனுப்பினாள். அக்குடத்தின் மீது கரசந்திரிகா கையை வைத்ததும் பொற்காசுகள் கரியாக மாறின. பிறகு சியாமபாலாவின் மூலம் கரசந்திரிகா விரத மகிமையை அறிந்து பலனடைந்தாள். வரலட்சுமி விரதத்தன்று இந்தக் கதையை வீட்டிற்கு வரும் சுமங்கலிகளிடம் சொன்னாலும், கேட்டாலும் நன்மை உண்டாகும்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us