Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/காற்று அசுரன்

காற்று அசுரன்

காற்று அசுரன்

காற்று அசுரன்

ADDED : ஆக 22, 2024 03:04 PM


Google News
Latest Tamil News
குழந்தை கண்ணனுக்கு ஒரு வயது. ஒருநாள் தாய் யசோதை குழந்தைக்கு பாலுாட்டி துாங்க வைத்தாள். பின் சமைக்க அடுப்படிக்குள் சென்றாள்.

அப்போது 'த்ருணாவர்த்தன்' என்னும் அசுரன் காற்று வடிவில் தோன்றி கண்ணனை துாக்கிக் கொண்டு மாயமானான். யசோதை குழந்தையைக் காணாமல் பதறினாள். ஆயர்கள் கண்ணனைத் தேடி நாலாபுறமும் ஓடினர். இதனிடையே கண்ணன் மலை போல கனக்கவே சுமக்க முடியாமல் அசுரன் விழித்தான். திடீரென அவனது கழுத்தை குழந்தை கண்ணன் நெறித்தான். வலி தாளாமல் அசுரன் உயிர் விட்டான். மரண ஓலம் எங்கும் எதிரொலித்தது. சப்தம் கேட்ட திசை நோக்கி வந்தனர். கண்ணன் சிரித்தபடி படுத்திருந்தான். அதைக் கண்ட கோபியர்கள், 'குழந்தையாய் இருந்தாலும் தெய்வம் தெய்வம் தானே' என மகிழ்ந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us