Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/நாளாம் நாளாம் திருநாளாம் நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்

நாளாம் நாளாம் திருநாளாம் நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்

நாளாம் நாளாம் திருநாளாம் நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்

நாளாம் நாளாம் திருநாளாம் நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்

ADDED : மார் 20, 2020 10:26 AM


Google News
Latest Tamil News
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு

பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்

கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்

காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்

வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து

மந்திரக் கோடி உடுத்தி மணமாலை

அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி

பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி

பூப் புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்

காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

கதிர் ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்

சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்

அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத

முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்

பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து

காய் சின மாகளிறு அன்னான் என் கைப்பற்றி

தீவலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்

நம்மை உடையவன் நாராயணன் நம்பி

செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி

அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்

வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு

எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி

அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்துப்

பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து

மங்கல வீதி வலஞ் செய்து மாமண நீர்

அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்

மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை

வேயர் புகழ் வில்லிபுத்துார்க்கோன் கோதை சொல்

துாய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்

வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே

இப்பாடலை பாட திருமணம், குழந்தைப்பேறு கிடைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us