Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

ADDED : ஏப் 28, 2015 03:56 PM


Google News
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்

புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்

தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த

அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.

பொருள்: தன்னிகர் இல்லாதவனே! வேதப் பொருளாய் விரிந்து விளக்காக என் மனதிற்குள் புகுந்தவனே! பெருமை மிக்க நரசிம்மனே! பொலிவுடன் காட்சி தரும் பொன்மலையே! தகுதி மிக்கவனே! திருக்கடிகை என்னும் திருத்தலத்தில் மலை உச்சியில் வீற்றிருக்கும் கனியே! உன்னைத் தரிசித்ததால் நற்கதி அடைந்தேன்.

குறிப்பு: திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி பாடல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us