Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

ADDED : ஏப் 21, 2015 10:23 AM


Google News
திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர்தொழ

வருமகளே உலகு எல்லாமும் என்றென்றும் வாழ வைக்கும்

ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது

தருமகளே தமியேன் தலை மீது நின் தாளை வையே.


பொருள்: செல்வம் தருபவளே! பாற்கடலில் பிறந்தவளே! தேவர்களால் வணங்கப்படுபவளே! உலகத்தை வாழ வைப்பவளே! திருமாலின்

மார்பில் குடியிருப்பவளே! மனவலிமை தருபவளே! எளியவனான என் தலை மீது உன் திருவடியை வைத்து அருள்புரிவாயாக.

குறிப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய திருமகள் அந்தாதி பாடல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us